ETV Bharat / city

டீக்கடையில் பலகாரம் சுட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

author img

By

Published : Feb 10, 2022, 8:12 AM IST

dmk candidate campaign at coimbatore
திமுக வேட்பாளர்

பலகாரங்கள் சுட்டு தந்தும், சாக்கடை சுத்தம் செய்தும் கோயம்புத்தூரில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு விதங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி சரவணம்பட்டி பகுதி 11வது வார்டு திமுக வேட்பாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி (BE பட்டதாரி) நேற்று (பிப். 10) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்தும், அங்குள்ள தேநீர்க் கடை ஒன்றில் பலகாரம் சுட்டும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பலகாரம் சுட்டு தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

மேலும், வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அவர், தான் வெற்றி பெற்றால் அப்பகுதி மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: சென்னை மாநகரம் மிருகக்காட்சி சாலையா? - மாநகராட்சிக்கு சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.